"நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே."
['பதுமனார்' எழுதிய பாடல்;
குறுந்தொகை: எண் 6.
நெய்தல் - தலைவி கூற்று]
இருள் மிகுந்த நள்ளிரவில். உரையாடல்களை முடித்துவிட்டு அமைதியாக மக்கள் எல்லோரும் இனிமையாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அகன்ற இவ்வுலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கவலையின்றித் தூங்குகின்றன. (தலைவன் நினைவால் வருந்தியவாறு) நான் ஒருத்தி மட்டும் தூங்காமல் இருக்கிறேன்.
.............................
அப்படியே,
இப்பாடலையும் கேளுங்கள். .
.
திரையிசைப் பாடல் :
ஊரு சனம் தூங்கிருச்சு - மெல்ல திறந்தது கதவு (1986)
கங்கை அமரன்
https://youtu.be/WrBIA5WPDDU?si=BqHrNaJzoJp7LE8R
இப்பாடலையும் கேளுங்கள். . .
திரையிசைப் பாடல் :
பூ உறங்குது பொழுதும் உறங்குது - தாய் சொல்லைத் தட்டாதே (1961)
கண்ணதாசன்
https://www.youtube.com/watch?v=63Mf7bxBf3c
.............................
அக்டோபர் 17, 2024
#இலக்கிய ஓவியங்கள், #செய்யறிவு, #அன்றும்-இன்றும், #Themozhi