Showing posts with label ஓவியம். Show all posts
Showing posts with label ஓவியம். Show all posts

Wednesday, November 27, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 18

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 18




மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! 
 
உள்ளம் என்பது எப்போதும் உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லை போராட்டம்! கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால் அதைத் தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!  
--- பா. விஜய் 
 
  
நன்றி: வல்லமை - நவம்பர் 27, 2013 

#ஓவியம், #வல்லமை,  Themozhi 




Friday, October 25, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 17

 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 17



ஓவியம்: தேமொழி
கவிதை: கவிஞர் தனுசு

 
காத்திருப்பில் கலங்காதே …

கொல்லிமலை காட்டுக்குள்ள
மூங்கில் வெட்டும் சின்னப்புள்ளை
மூணு நாளா தவிச்சிருக்கு -என்
முகம் காண துடிச்சிருக்கு.

பச்சரிசி சோறோடு
கருவாட்டுக் குழம்பாக்கி
தெருவோடு பார்த்திருக்கு -எனக்காக
ஒத்தையிலே காத்திருக்கு.

கொஞ்சிப்பேச வாரேனடி
கொஞ்சம் பொறு மயிலே!
கூட்டிக் கொண்டு வாரேன்
குளிர்காயும் நிலவை!
  

 
  
நன்றி: வல்லமை - அக்டோபர் 25, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi 



Monday, October 14, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 16

 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 16





கலைமகள் வாழ்த்து
வெள்ளைக் கமலத்திலே -- அவள்
வீற்றிருப் பாள், புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான் -- நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்
 -- பாரதி 

 
 
படத்தைப் பற்றிய குறிப்பு:
1987 இல் வரைந்த கோட்டோவியம் இது.  மாசு படிந்து, களையிழந்து இருந்த படத்தை ஒளிவருடி, எண்ணிம வடிவில் கணினியின் உள்ளிழுத்து, பிரகாசத்தை அதிகரித்து, குறைகளை வெளிறச் செய்து, பிரதி எடுத்து, வரிகளை மீண்டும் செப்பனிட்ட படம். பெரும்பாலும் மாதிரி பார்த்து வரையும் என் பழக்கத்தைத் தவிர்த்து, மாதிரியின்றி, மனதில் பதித்திருந்த பல படங்களில் கண்ட சரஸ்வதியின்  படத்தை மனக்கண் முன் கொண்டுவந்து வரைந்த ஓவியம் என்பதால் என் மனதிற்கு நிறைவு தந்த ஓவியங்களில் ஒன்று.

 

  
நன்றி: வல்லமை - அக்டோபர் 14, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi 

Friday, October 11, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 15

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 15



கௌதம புத்தர்

[மின் பலகையில் ‘ஸ்கெட்ச் புக் எக்ஸ்ப்ரெஸ்’ (SketchBook Express apps for Tablets) என்ற ஓவியம் வரையும் மென்பொருள் கொண்டு என் முதல் முயற்சியாக உருவாக்கிய எண்ணிம கௌதம புத்தர் ஓவியம்.]


  
நன்றி: வல்லமை - அக்டோபர் 11, 2013 

#ஓவியம், #வல்லமை,  Themozhi 


 

Friday, October 4, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 14

 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 14



மணமகள்

  
நன்றி: வல்லமை - அக்டோபர் 4, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi 

Monday, July 22, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13



கதகளி நடனம்


  
நன்றி: வல்லமை - ஜூலை 22, 2013   

#ஓவியம், #வல்லமை,  Themozhi 


Monday, July 15, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 12

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 12



ஒடிசி நடனம்

  
நன்றி: வல்லமை - ஜூலை 15, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi 


Monday, July 8, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11

 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11



மணிப்புரி நடனம்



நன்றி: வல்லமை - ஜூலை  8, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi 


 

Monday, June 10, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10

 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10




ஓவியம்: தேமொழி
கவிதை: கவிஞர் தனுசு

""மாலை கொடு வீரைய்யா!""

வண்டி ஒட்டும் வீரைய்யா!
சண்டித்தனம் ஏனையா?
ஒண்டிக்கட்டை நானையா -என்னைக்
கட்டிக் கொண்டு போய்யா!

முருக்கு மீசை மாமனே!
திருக்கை மீன் நானாவேன்
திருக்கிக் கொண்டு போவானேன்?
செருக்கு வேண்டாம் கோமானே.

காடுகரை காக்கும் வீரைய்யா!
அக்கா பொண்ணு முகம் பாரைய்யா!-அதில்
ஏக்கம் ஒரு நூறைய்யா-நல்ல
சாங்கி செய்தி சீக்கிரம் சொல்லையா!
  

நன்றி: வல்லமை - ஜூன் 10, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi 


 

Monday, May 13, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9



ஓவியம்: தேமொழி
கவிதை: கவிஞர் தனுசு


"திமிர் கொண்ட அழகு"

உன் கண்ணில் தெரிவதென்ன
நெருப்பா?
என்னைச் சுட்டு வீழ்த்தச் செய்யும்
குறும்பா?

உன்
உதட்டில் இருப்பதென்ன
சிரிப்பா?
என்னை அதட்டி அழைக்கும்
அழைப்பா?

உன் பேச்சில் சொல்வதென்ன
இனிப்பா?
என்னை உனதாக்கச் செய்யும்
துடிப்பா?

திமிர் கொண்ட தென்றல் காற்றே….
உன்னைத் தேடி வந்தால்
உன்
புருவத்தில் ஏளனம் ஏற்றி
என்
பருவத்தில் தீ வைப்பதேனடி?

பள்ளி அறை பாடம் நடத்த
வெள்ளி நிலா தூண்டுதடி!
ஊதக்காற்றும் ஒத்துழைத்து
ஒதுங்கச்சொல்லிக்  கூவுதடி!

உன் சுட்டு விரல் அசைவு
என்
கட்டுப்பாட்டை நொறுக்கும்!
உன் பட்டுப் பளிங்கு மேனி
என்னை உள் மூச்சில் வதைக்கும்!

பஞ்சமின்றிச் செழித்திருக்கும்
அஞ்சுகமே!
பட்டு நிலா வியப்புறும்
பெட்டகமே!

பொன்வண்டு அறியாது
அதனுடைய அழகை…
உன் கண் கொண்டு
உற்றுப்பாரடி
உன்னுடைய பேரழகை!

வஞ்சனையின்றி வளர்ந்த
உன் வதனம்!
அதை
இந்த மாமனிடம் தாரைவார்க்க
ஏனடி மெத்தனம்!

பொத்தி வைத்து ஆவதென்ன
அந்த
கன்னிமலை அதிசயம்!
இனி
ஒத்தி வைத்தால் தாங்காது என் உடம்பு
இது சத்தியம்!

காமன் கோயில் சாமிக்கு
நான் யாசிப்பது கேட்கலியா
தீர்த்து வைக்க தேவிக்கு
மாமன் மையல் புரியலியா!

-தனுசு-

 

 

நன்றி: வல்லமை - மே 13, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi 


 

Friday, March 1, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8





புல்லாங் குழல்கொண்டு வருவான்! – அமுது
       பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே – அதைக்
       கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.       

தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
       தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை.

- பாரதியார்;  கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை


 

நன்றி: வல்லமை - மார்ச்  1, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi 



 


 
 

 

Friday, February 22, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7




அடிவானத் தேயங்குப் பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
முடிவான வட்டத்தைக் காளி யாங்கே
மொய்குழலாய், சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்.
வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய். (150)
                – பாஞ்சாலி சபதம், பாரதியார்

 

நன்றி: வல்லமை - பிப்ரவரி 22, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi 



 


 
 

Thursday, February 14, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6

 


முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போலே ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா
      வரிகள்: வாசன்

காதலர் நாள் வாழ்த்துகள் 


நன்றி: வல்லமை - பிப்ரவரி 14, 2013  



#ஓவியம், #வல்லமை,  Themozhi 



 

Friday, February 8, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5

 



ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி…
தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராகக் குடியிருப்போம்…
வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேணியிலே கொதியிருக்கும்…
கையகலம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்…
வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…
             வரிகள்: கண்ணதாசன்


நன்றி: வல்லமை - பிப்ரவரி  8, 2013  


#ஓவியம், #வல்லமை,  Themozhi 



Friday, February 1, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4




சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு…சுகம் செலவு…இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்…

ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே…வாழ்நாளிலே
       வரிகள்: கண்ணதாசன்



நன்றி: வல்லமை - பிப்ரவரி 1, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi 



 


 

 

Friday, January 25, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3




கை வீசம்மா கை வீசு…

அன்றும்:
கை வீசம்மா கை வீசு…
கடைக்குப் போகலாம் கை வீசு…
மிட்டாய் வாங்கலாம் கை வீசு…
மெதுவாய் திங்கலாம் கை வீசு…

சொக்காய் வாங்கலாம் கை வீசு…
சொகுசாய் போடலாம் கை வீசு…
கோயிலுக்குப் போகலாம் கை வீசு…
கும்பிட்டு வரலாம் கை வீசு…

இன்றும்:
கை வீசம்மா கை வீசு…
கோட்டைக்குப் போகலாம் கை வீசு…
கொடியை ஏற்றலாம் கை வீசு…
நாட்டை ஆளலாம் கை வீசு…

படையில் சேரலாம் கை வீசு…
பகைவரை அழிக்கலாம் கை வீசு…
நாட்டைக் காக்கலாம் கை வீசு…
நல்லோர் வழி நடக்கலாம் கை வீசு…

– தேமொழி
(இன்றைய வரிகள் மட்டும்)

 

குடியரசு தின வாழ்த்துகள்…


நன்றி: வல்லமை - ஜனவரி 25, 2013 

#ஓவியம், #வல்லமை, #கவிதை, Themozhi 

 



 

Friday, January 18, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 2

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 2



சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே என்ன என்ன ஆசையுண்டோ
உள்ளம் தன்னை மூடிவைத்த தெய்வம் வந்தால் சொல்லும் இங்கே…
         – கவிஞர் முத்துலிங்கம் 


நன்றி: வல்லமை - ஜனவரி 18, 2013 

#ஓவியம், #வல்லமை, Themozhi 

 


Monday, January 14, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 1

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 1



மஞ்சுவிரட்டு

என் தூரிகையின் வண்ணச் சிதறல்களைப் பற்றிய என் எண்ணச் சிதறல்கள், ஒரு மங்கிய ஓவியம் போன்ற காலம் கடந்த தெளிவில்லாத நினைவுகள். நான் ஓவியம் வரையக் காரணமாக இருந்தவர்கள் என் மாதா, பிதா, குரு,  மாமா மற்றும் எனது கல்வி.

எனது மிகச் சிறுவயதில், அதாவது ஐந்து வயதில் முதல் வகுப்பில் படித்த பொழுது, குழந்தைகள் தினத்திற்காக இருக்கலாம் ஆனால் சரியாக நினைவு இல்லை, ஓர் ஓவியப் போட்டி நடந்தது.  நகரம் முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றார்கள்.  என் பள்ளியிலும் என் ஆசிரியை எங்களைப் பேருந்தில் மற்றொரு பள்ளிக்கு ஓவியப் போட்டிக்காக அழைத்துப் போவதாகச் சொன்னார்கள். செய்தி தெரிந்த அம்மா எனக்கு எண் இரண்டை எழுதி, அதற்கு ஒரு மூக்கு(அலகு), கண், அடியில் பானை போல ஒரு பெரிய வட்டம் போட்டு, வயிறு போல வரைந்து ‘வாத்து’ வரையக் கற்றுக் கொடுத்தார்கள்.  எனவே முதலில் நான் நினைவு தெரிந்து வரைந்த உருவம் வாத்து.  பங்கேற்றதை ஊக்கப்  படுத்துவதற்காக ஒரு சான்றிதழ் கொடுத்தார்கள்.  என் அம்மா  அதைப் பலகாலம் பத்திரமாக வைத்திருந்தார்கள்.  அதன் விதி என்ன ஆயிற்று என்று நினைவில்லை. முதல் பரிசு மட்டும் வாங்கியிருந்தேன் என்றால் அம்மா என்ன செய்திருப்பார்களோ தெரியவில்லை.

பயிர்களுக்கு உரம் போட்டு வளர்ப்பது போல பிறகு என் சித்திரக் கலையை மதிப்பெண் போட்டு வளர்த்தவர் என் அப்பா.  கோடை விடுமுறைகளிலோ, அல்லது கண்ணைக் கவரும் அழகிய படங்கள் கிடைத்தால் அதை என் கையில் கொடுத்து வரையச் செய்து, மூலப் படத்துடன் ஒப்பிட்டு ஒரு மதிப்பெண்ணும் கொடுப்பார்.  என் தந்தையின் நண்பர் ஒருவர் பொங்கல் வாழ்த்து அனுப்பினார். அவர் சிறந்த ஓவியர்  என்பதால் தானே வரைந்த ஓவியங்களை வாழ்த்துக்களாக அனுப்புவார். அவ்வாறு அவர் அனுப்பிய பொங்கல் வாழ்த்தைப் பார்த்து வரைந்ததுதான் இந்த “மஞ்சுவிரட்டு” ஓவியம்.

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது எனக்கு வண்ண ஓவியம் தீட்ட ஆசை வந்தது.  வண்ணங்களும் தூரிகைகளும் வாங்கித் தரச் சொல்லி அம்மாவை நச்சரித்தேன். அம்மா மிகவும் சிறு வயது என நினைத்திருக்கக் கூடும், வாங்கித் தரவில்லை.  ஊரிலிருந்து மாமா வந்தார். கடைத்தெருவுக்கு அழைத்துப் போய் ஏதாவது வாங்கிக் கொடுத்துவிட்டு ஊருக்குத் திரும்பிச் செல்வது அவர் வழக்கம்.  ஆனால் அவர் ஏதாவது வேண்டுமா என்று கேட்டால், நாங்கள் அதை வாங்கிக் கொடுங்கள், இதை வாங்கிக் கொடுங்கள் என்று கேட்கக் கூடாது என்பது அம்மாவின் கண்டிப்பான கட்டளை.  ஆனாலும் அதை மீறி, மாமாவிடம் வண்ணங்கள் வேண்டும், தூரிகை வேண்டும் என்று கேட்டதும் அவர் எதிரிலேயே அம்மாவிடம் திட்டு வாங்கினேன்.  மாமாவும் தனது தங்கையைச் சமாதானப் படுத்திவிட்டு நான் கேட்டவற்றை வாங்கிக் கொடுத்தார்.  இதனால் அவரும் என் கலை ஆர்வத்திற்குத் தன்னால் இயன்ற பங்கைச் செய்திருக்கிறார்.

பிறகு என் ஓவிய ஆசிரியர், அவர்  பெயர் கங்காதரன் ஆக இருக்கக் கூடும்.  அவர் பெயர் என்ன என்று கேட்டால்  சொல்லியதில்லை.  மாணவிகள் நாங்களாகத் துப்புத் துலக்கி மாஸ்டரின்  பெயர்  அதுவாக இருக்கக் கூடும் என முடிவு செய்தோம்.  மாமா வாங்கித் தந்த வண்ணங்களைக் கொண்டு நான் கன்னா பின்னா என்று வர்ணம் தீட்டி, என் ஓவியப் பாடத்தின் நோட்டுச் சுவடிகளை வீணடித்தாலும் நன்றாக இருக்கிறது என்று ஊக்கப்படுத்தினார்.  பென்சில் ஓவியம் வரையவே அடுத்த மாணவிகள் முகத்தைத் தூக்கிய பொழுது, நான் தேவை இல்லாமல் வர்ணங்களைக் குழப்பி வெள்ளை அடித்தது அவருக்குப் பிடித்துப் போயிருக்கக் கூடும். எப்பொழுதோ அப்பாவைச் சந்தித்த பொழுது நான் அருமையாக வரைவதாக அப்பாவிடமும் சொல்லிவைத்தார்.

பிறகு கல்லூரியில் விலங்கியல் பாடம் எடுத்தாலும் எடுத்தேன், எப்பொழுது பார்த்தாலும் ரெகார்ட் நோட்டில் வரைவது தவிர வேறு வேலையே இருந்ததில்லை.  வரையத் தெரியாதவர்களையும் ஓவியர்களாக உருவாக்கி அனுப்பியது விலங்கியல் படிப்பு.

வரைவது இருக்கட்டும் ஏதாவது பரிசு வாங்கினாயா? என்று கேட்கக் கூடாது. ஏதோ ஒன்றிரண்டு ஆறுதல் பரிசுகள் அவ்வளவே. கல்லூரியில் ஒருமுறை மூன்றாம் பரிசு, ஓவியர் ஜெயராஜ் கொடுத்த ஆறுதல் பரிசு (அவர் ஜெ…  என்று கையொப்பமிட்ட ஒரு கைக்குட்டை) வாங்கியிருக்கிறேன்.  நான் மிகவும் பெருமையாகக் கருதுவது கல்லூரி நாட்களில் தமிழக அளவில் நடந்த ஓவியப் போட்டியில் பங்கேற்று, பாரதியாரின் “காணி நிலம் வேண்டும்” கவிதைக்கும், பாரதிதாசன் கவிதை ஒன்றிற்கும் வரைந்த வண்ண ஓவியங்களைத்தான். தமிழக அரசு நடத்திய இந்தப் போட்டியில் ஆறுதல் பரிசாக நூறு ரூபாயும், ஒரு சான்றிதழும் கிடைத்தது.  ஓவியத்தைத் தொழிலாகவும், சிறப்புப் பாடமாகவும் கொண்ட ஓவியர்கள் இடையில் பொழுது போக்காக ஓவியம் வரையும் எனக்கும் கிடைத்த அந்தப் பரிசு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

ஆனால், திருமணம், குழந்தைகள், பணி  என்று காலப் போக்கில் வாழ்க்கை தடம் மாறிச் சென்ற பிறகு இப்பொழுது படங்கள் அதிகம் வரைவது இல்லை.  நான் வரைந்த ஓவியங்கள் சிலவற்றைத் தேடி எடுத்து ஸ்கேன் செய்து வைத்திருக்கிறேன்.  அந்த சேகரிப்பில் இருக்கும் ஓவியமே இந்த “மஞ்சுவிரட்டு”.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!  


நன்றி:  வல்லமை - பொங்கல் இதழ்,  ஜனவரி 14, 2013


#ஓவியம், #வல்லமை, #நினைவுகள், #Themozhi