வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 18
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
உள்ளம் என்பது எப்போதும் உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்!
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லை போராட்டம்! கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால் அதைத் தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
--- பா. விஜய்
நன்றி: வல்லமை - நவம்பர் 27, 2013
#ஓவியம், #வல்லமை, Themozhi
