Sunday, December 1, 2013

வல்லமைச் சிறுகதைகளில் ஒன்றாக நான் எழுதிய கதையும் ...

 
வல்லமைச் சிறுகதைகளில் ஒன்றாக  நான் எழுதிய கதையும் ...



வல்லமைச் சிறுகதைகள் – நூல் வெளியீடு
[நன்றி : வல்லமை மின்னிதழ்: http://www.vallamai.com/?p=40337]

ஐக்கியா டிரஸ்ட் நிறுவனம் மற்றும் வல்லமை இணைய இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தையும், ஐக்கியா டிரஸ்ட் நிறுவனரும் மற்றும் எழுத்தாளருமான திரு. வையவன் அவர்கள் ’வல்லமைச் சிறுகதைகள்’ என்ற பெயரில் நூலை மிக அழகாக வெளியிட்டிருக்கிறார்கள். டபுள் கிரவுன் அளவில், 102 பக்கங்களில், எழுத்தாளர்களின் படங்களுடனும் சுருக்கமான அறிமுகத்துடனும் இந்நூல் வெளிவந்துள்ளது. வாசுவின் பலவண்ண ஓவியங்கள், அட்டையை அலங்கரிக்கின்றன. திரு வையவன் அவர்களுக்கும், இந்த போட்டியில் பங்கு பெற்ற கதைகளிலிருந்து சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ள திரு வெங்கட் சாமிநாதன் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகளும், நன்றியும். பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள்.

வல்லமைச் சிறுகதைகள் - பல்வேறு எழுத்தாளர்கள்; 
பக்.104; ரூ.100; தாரிணி பதிப்பகம், சென்னை-20;  044-2440 0135.



நன்றி: வல்லமை 
டிசம்பர் 1, 2013  

சிறுகதை: "ஜினா என்றொரு க்ருயெல்லா' - தேமொழி 





#நூல், #வல்லமை, #சிறுகதைகள், #Themozhi