Friday, October 25, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 17

 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 17



ஓவியம்: தேமொழி
கவிதை: கவிஞர் தனுசு

 
காத்திருப்பில் கலங்காதே …

கொல்லிமலை காட்டுக்குள்ள
மூங்கில் வெட்டும் சின்னப்புள்ளை
மூணு நாளா தவிச்சிருக்கு -என்
முகம் காண துடிச்சிருக்கு.

பச்சரிசி சோறோடு
கருவாட்டுக் குழம்பாக்கி
தெருவோடு பார்த்திருக்கு -எனக்காக
ஒத்தையிலே காத்திருக்கு.

கொஞ்சிப்பேச வாரேனடி
கொஞ்சம் பொறு மயிலே!
கூட்டிக் கொண்டு வாரேன்
குளிர்காயும் நிலவை!
  

 
  
நன்றி: வல்லமை - அக்டோபர் 25, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi