Saturday, October 5, 2013

அன்னை சக்தி

அன்னை சக்தி 


பல்லவி
ஒவ்வொரு இரவும் உந்தன் புகழ்பாடி   
இவ்வுலகம் வாழுமே    -- அன்னை சக்தி 
ஒவ்வொரு இரவும் உந்தன் புகழ் பாடியே
 
அனுபல்லவி  
மனமது உருகிநான் 
தினமுனைப் போற்றுவேன்
கரமது குவிந்திடவே 
சிரமது பணிந்திடவே  -- தாயே (ஒவ்வொரு)

சரணம்
செல்வமுடன்  கல்வி வீரமும் வழங்கியே  
செழித்திந்த உலகினை மகிழ்ந்திடச் செய்வாய் 
சேவை புரிந்தே பல்லுயிர் போற்றிடும்  
சேயிழையார்  தினமுனை வாழ்த்திட -- தாயே (ஒவ்வொரு)



வல்லமைக் குழுமத்தில்,  சக்தி ரதம் என்ற  நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் எழுதிய பாடல் 


அக்டோபர் 5, 2013 

#கவிதை,  #Themozhi 

கவிதை