வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10
ஓவியம்: தேமொழி
கவிதை: கவிஞர் தனுசு
""மாலை கொடு வீரைய்யா!""
வண்டி ஒட்டும் வீரைய்யா!
சண்டித்தனம் ஏனையா?
ஒண்டிக்கட்டை நானையா -என்னைக்
கட்டிக் கொண்டு போய்யா!
முருக்கு மீசை மாமனே!
திருக்கை மீன் நானாவேன்
திருக்கிக் கொண்டு போவானேன்?
செருக்கு வேண்டாம் கோமானே.
காடுகரை காக்கும் வீரைய்யா!
அக்கா பொண்ணு முகம் பாரைய்யா!-அதில்
ஏக்கம் ஒரு நூறைய்யா-நல்ல
சாங்கி செய்தி சீக்கிரம் சொல்லையா!
நன்றி: வல்லமை - ஜூன் 10, 2013
#ஓவியம், #வல்லமை, Themozhi
