மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல் என்ற பிரிவில் நான் எழுதிய
"இலக்கிய மீளாய்வு" நூல் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பரிசு பெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
[கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது : மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல்; இலக்கிய மீளாய்வு – தேமொழி]
மாறுபட்ட ஆய்வு நூல்களை வரவேற்கும் முனைவர் க. சுபாஷிணி அவர்களின் பரந்த நோக்கும், அதைத் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் மூலம் வெளியிட்ட தொலைநோக்கும்தான் காரணம். அதற்கு என்றென்றும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அடுத்து இது போன்ற ஆய்வுக் கட்டுரைகளை எழுத வாய்ப்பளித்த முனைவர் பாண்டியராஜா ஐயாவின் வலைத்தளம். இதை மனத்தில் இருத்தி ஐயாவுக்கு இந்த நூலைக் காணிக்கை ஆக்கினேன்.
தமுஎகச கலை இலக்கிய விருது அளித்து எனக்கு ஊக்கமூட்டியுள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திற்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். தொடர்ந்து எழுதுவேன்......
மேலும் சில படங்கள் . . .
-----------------------------------
#விருது, #Themozhi









