Wednesday, November 11, 2020

வலியற்ற வாழ்வில்லை

வலியற்ற வாழ்வில்லை 



தன்னைத் தானே செதுக்கினால் 
முன்னேற்றத்திற்குத் தடையுமில்லை 
வலி தரும்  உளி  என்று ஒதுக்கினால் 
உயர்வான உருவம் தோன்றுவதில்லை 

தன் குறை அறிந்து நீக்கினால் 
அது போன்ற ஒரு துணிவுமில்லை 
துணிவோம் என்ற முயற்சியால் 
ஒழியாத  துக்கமுமில்லை 

வலியற்ற வாழ்வு எவருக்கும் இல்லை 
வலிக்கு அஞ்சினால் வாழ்வும் இல்லை 
தன் முயற்சியால் குறைதனை நீக்கிடுவோம்  
தளராது நம் வாழ்வை எதிர் கொள்வோம் 


#கவிதை, #Themozhi