ஓயாது உழைத்த கலைஞர்
உயிருடன் தண்டவாளத்தில் படுத்துப்
போராடியதெல்லாம் ஒரு போராட்டமா
உயிரிழந்தும் இறுதியாகப் படுத்தவாறே
போராடி வென்றதற்கு அது ஈடாகுமா
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்றவரை
மக்கள் தேர்தலில் அன்று ஆதரிக்கவில்லை
படுத்துக்கொண்டே போராடி வென்றவரை
மக்கள் என்றும் மறக்கப் போவதுமில்லை
கிழக்கே உதிக்கும் சூரியன்
மேற்கே உதிக்காது ஒருநாளும்
சொல்லியிருக்கிறோம் நாம்
இயற்கை மாறாது என்பதற்காக
மேற்கே மறையும் சூரியன்
கிழக்கே மறையும் ஒருநாளும் வந்தது
தெரிந்து கொண்டோம் இன்று அந்த
இயற்கையை மாற்றியவர் யாரென்று
தமிழ்த்தாயின் தங்கமகனே !
ஓயாது உழைத்த கலைஞரே !
உறங்குமிடமாகக் கடற்கரை ஏனோ?
ஓயாத அலைகளுக்கும் சவால் விடுக்கத்தானோ?
கலைஞருக்கு ஓர் இரங்கற்பா
நன்றி: சிறகு
ஆகஸ்ட் 11, 2018
#கவிதை, #சிறகு, #கலைஞர், #Themozhi