Saturday, August 11, 2018

ஓயாது உழைத்த கலைஞர்

ஓயாது உழைத்த கலைஞர் 


உயிருடன்  தண்டவாளத்தில்  படுத்துப் 
போராடியதெல்லாம்  ஒரு போராட்டமா
உயிரிழந்தும் இறுதியாகப் படுத்தவாறே 
போராடி வென்றதற்கு  அது  ஈடாகுமா 

படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்றவரை 
மக்கள் தேர்தலில் அன்று  ஆதரிக்கவில்லை 
படுத்துக்கொண்டே போராடி வென்றவரை 
மக்கள் என்றும் மறக்கப் போவதுமில்லை 

கிழக்கே உதிக்கும் சூரியன்
மேற்கே உதிக்காது ஒருநாளும்  
சொல்லியிருக்கிறோம் நாம் 
இயற்கை மாறாது என்பதற்காக 

மேற்கே மறையும் சூரியன் 
கிழக்கே மறையும் ஒருநாளும் வந்தது 
தெரிந்து கொண்டோம் இன்று அந்த 
இயற்கையை மாற்றியவர் யாரென்று 

தமிழ்த்தாயின் தங்கமகனே !
ஓயாது உழைத்த கலைஞரே !
உறங்குமிடமாகக் கடற்கரை ஏனோ?
ஓயாத அலைகளுக்கும் சவால் விடுக்கத்தானோ? 


கலைஞருக்கு ஓர் இரங்கற்பா


நன்றி: சிறகு 
ஆகஸ்ட் 11, 2018


#கவிதை, #சிறகு, #கலைஞர், #Themozhi