Sunday, January 8, 2012

அன்பு அம்மாவிற்கு

 அன்பு அம்மாவிற்கு






பசியுடன் பள்ளியில்
இருந்து வந்த பொழுது
பரிவுடன் சமைத்த
உணவைக் கொடுத்தாய்

பாடநூலுக்கு உடனே
அட்டை வேண்டிய பொழுது 
பாசத்துடன்  பழுப்பு
அட்டைதனைப் போட்டாய்

பெயர் நீ  எழுதினால்
ராசியென்ற பொழுது
பெருமையுடன் சிட்டை
ஒட்டி எழுதினாய்

பெற்றவன் பெயரின்
முதலெழுத்தும்  பின்னால்
பெற்ற அன்பு 
செல்வமெனது பெயருமாய்

அன்பு அன்னை நீ 
மனம் வருந்தாமல்
தன் கடமையிது என்பது
போல் நினைக்கிறாய்

என் வாழ்வில் உனக்கு
உரிமை இல்லாததுபோல்
உன்னால் எப்படியிது
முடிந்தது சொல்வாய்



நன்றி: வகுப்பறை  
ஜனவரி 08, 2012



#கவிதை, #வகுப்பறை, #Themozhi