"வையச்சிற்றூர்"
வையச்சிற்றூரில்
வாழ்கிறோம் தனிமையில்
தொடர்புகள் பலப்பல
உறவுகளோ வெகுசில
தொடர்புகொள்ள இயலாத
கடைக்கோடிப் பகுதி
என்றெதுவும் இனியில்லை
விரைந்து அடைய முடியாத
அத்துவானக்காடு
என்றெதுவும் இனியில்லை
பழகுகிறோம் நாளும்
புதிய புதிய மக்களுடன்
உள்ளத்தால் விலகுகிறோம்
உடன்வாழும் உறவுகளை மறந்து
அன்புக்கு ஏங்கும் உண்மை
உறவுகள் வாடுகின்ற
மௌனமான தனிமையில்
வாழ்வுக்குப் பொருள்தான் என்ன
காட்சிப்பிழையாக விளங்கும்
வையச் சிற்றூர் வாழ்க்கை
நமக்கு வரமா சாபமா ??!!
அக்டோபர் 13, 2023
#கவிதை, #Themozhi