Monday, October 7, 2013

மீனாள் ஆளும் மதுரையிலே

மீனாள் ஆளும்  மதுரையிலே

[தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகளான கோலாட்டம், கும்மி ஆடல்களுக்காக....
ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு (தூக்குத் தூக்கி - படப்பாடல்) மெட்டின் சாயலில் ]


தானே தன தன்னானனே  - தன
தானே தனனே தன்னானனே
தானே தன தன்னானனே - தன
தானே தனனே தன்னானனே

மீனாள் ஆளும்  மதுரையிலே - சங்கத்
தமிழைத் தந்த மதுரையிலே
நாளும் அவள் ஆட்சியம்மா - அந்த
நான்மாடக் கூடலும் சாட்சியம்மா

வைகைக் கரையின் செல்வியவள் - வளர்
பொதிகை மலையின் செல்வமவள்
வாழும் உயிர்க் (க)அன்னையவள் - வளம்
தந்தே காத்திடும் தேவியவள்

மீனாள் ஆளும்  மதுரையிலே - சங்கத்
தமிழைத் தந்த மதுரையிலே
நாளும் அவள் ஆட்சியம்மா - அந்த
நான்மாடக் கூடலும் சாட்சியம்மா

பாரில் தோன்றும் துன்பமெல்லாம் - அவள்
பார்வை பட்டால் நீங்குமம்மா
மாதா சக்தி காளி என்றே -  அவள்
பாதமே பணிந்துநீ  போற்று அம்மா

மீனாள் ஆளும்  மதுரையிலே - சங்கத்
தமிழைத் தந்த மதுரையிலே
நாளும் அவள் ஆட்சியம்மா - அந்த
நான்மாடக் கூடலும் சாட்சியம்மா

தானே தன தன்னானனே  - தன
தானே தனனே தன்னானனே
தானே தன தன்னானனே - தன
தானே தனனே தன்னானனே


வல்லமைக் குழுமத்தில்,  சக்தி ரதம் என்ற  நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் எழுதிய பாடல் 


அக்டோபர் 7, 2013 


#கவிதை,  #Themozhi