Thursday, October 17, 2024

துயிலாத பெண்ணொருத்தி: இலக்​கி​ய ஓவி​யங்கள்

  



     "நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
     தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
     நனந்தலை உலகமும் துஞ்சும்
     ஓர்யான் மன்ற துஞ்சா தேனே."

          ['பதுமனார்' எழுதிய பாடல்;
          குறுந்தொகை: எண்  6. நெய்தல் - தலைவி கூற்று]

இருள் மிகுந்த நள்ளிரவில்.  உரையாடல்களை முடித்துவிட்டு அமைதியாக மக்கள்  எல்லோரும் இனிமையாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  அகன்ற இவ்வுலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கவலையின்றித் தூங்குகின்றன. (தலைவன் நினைவால் வருந்தியவாறு) நான் ஒருத்தி மட்டும் தூங்காமல் இருக்கிறேன்.

............................. 

அப்படியே

இப்பாடலையும் கேளுங்கள். . .
திரையிசைப் பாடல் :
ஊரு சனம் தூங்கிருச்சு - மெல்ல திறந்தது கதவு (1986)
கங்கை அமரன்
https://youtu.be/WrBIA5WPDDU?si=BqHrNaJzoJp7LE8R

இப்பாடலையும் கேளுங்கள். . .
திரையிசைப் பாடல் :
பூ உறங்குது பொழுதும் உறங்குது - தாய் சொல்லைத் தட்டாதே (1961)
கண்ணதாசன்
https://www.youtube.com/watch?v=63Mf7bxBf3c

.............................


அக்டோபர்  17, 2024

#இலக்​கி​ய ஓவி​யங்கள், #செய்யறிவு, #அன்றும்-இன்றும், #Themozhi