Sunday, May 18, 2025

நல்லாவின் பால் முழுதும் கன்றுக்கில்லை;

நறும்பூவின் மணமுழுதும் சோலைக்கில்லை:

நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை;

நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை

பல்லாரும் கனி முழுதும் மரத்துக்கில்லை:

பண்ணரம்பின் இசை முழுதும் யாழுக்கில்லை:

எல்லாமே பிறர்க்குழைக்கக் காணுகின்றேன்;

என் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும் வேண்டும்!

—  மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார்  —